
அறிகுறிப்பொருளின் ஆலய அமைப்பு முறைக்கு அடுத்தாக அருள் நெறிப்பொருளினை அறிய ஆராதணை முறையை பார்த்தால் அர்ச்சகர் (ஆச்சாரியார் அந்தணர்) எனப்படுபவர் ஆலயத்தில் இறைவனை ஆராதிக்கின்ற முறை தெளிவாக்கப்படுகிறது. அர்ச்சகர் இறைவனை ஆராதிப்பவரின் யோக்கிய முறை எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் எனில் சிவப் பிராமண குலத்தில் பிறந்த ஆதி சைவராகிய சிவப்பிராமணர்களில் மணக்குற்றம் உடற்குற்றம் அற்றவராக சமய தீட்சை,விசேஷ தீட்சை,நிர்வாண தீட்சை,ஆசாரியாபிஷேகம் என்னும் நான்கும் பெற்றவர்களாக வேதாகமங்களை நன்கு ஓதியுணர்ந்தவர்களாக இருத்தல் அவசியமான ஒன்றாகும். ஆராதிப்பவராகிய அந்தண சிவாச்சாரியர்கள் சிவதீட்சை முக்கியமாக சிவ பூஜை செய்து திருநீறு தரித்து உருத்திராட்சம் அணிந்து கொண்டு சந்தனம்,குங்குமம் அணிந்து தூய்மை யாக துலங்க வேண்டும். Read the rest of this entry »